குழாமுடன் நீராடச் சென்ற மாணவன் பலி
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி
Published September 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நுகவெல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ள நிலையில், மாணவ குழாமுடன் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.