வாகனங்கள் குறித்து அமைச்சர் வெளியிட்ட கருத்து
ஆபத்தான மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை
Published September 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆபத்தான மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்ட அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அதில்,
சத்தமாகவும், மாறுபட்ட ஒலியெழுப்பிகளுடனும், வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும் விளக்குகள் வாகனங்களின் முன், பின் மற்றும் பக்கவாட்டில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துதல் போன்றவற்றுடன் இயக்கப்படும் வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
