அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,604,018
Published September 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,604,018 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம், 37,495 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் மொத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 335,766 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.