சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது.
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட...
Published September 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 16 இலட்சம் ரூபா பெறுமதி 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அதன்போது இந்த வெளிநாட்டு சிகரட்டுகளை சுங்கவரி செலுத்தாமல் கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.