எல்ல விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது
எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர்
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி இரவு, தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏற்றிச் சென்ற பேருந்து சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது பேருந்து, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.