12ஆம் திகதி முதல் அஸ்வெசும கொடுப்பனவுகள்.
நாட்டில் செப்டெம்பர் மாதத்துக்கான நலன்புரி...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் செப்டெம்பர் மாதத்துக்கான நலன்புரி உதவித்தொகை நாளை மறுநாள் 12ஆம் திகதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
11,201,647,000.00 ரூபாய் 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களது சேமிப்புக் கணக்குகளில் வைக்கப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது.