LATEST
நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!
உள்ளூர்

சமூக ஊடகங்களில் வரும் முதலீட்டு சலுகைகளை நம்பாதீர்கள்

May 24, 2026 · Tamil Ceylon LK

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் நோக்கில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபரால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிகள் தொடர்பான தகவல்களை கணினி குற்ற விசாரணைப் பிரிவியின் 011 2300 756 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 071 859 2918 மற்றும் 071 859 1765 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலமும் தகவல்களை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, குற்றவியல் விசாரணைத் திணைக்களம் அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்க முடியும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Related Stories

மேலும் ›