இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் மூடப்படுகிறதா ?

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தொடர்பில்...

Published September 12, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தொடர்பில் சபாநாயகர் வௌியிட்ட கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.

– இன்றை பாராளுமன்ற அமர்பில்,

தற்போதைய அரசாங்கம் மூட திட்டமிட்டுள்ள அரச நிறுவனங்களுள் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபணமும் உள்ளடங்கியிருப்பதாக பல ஊடகங்களில்தெரிவித்துள்ளன.

முன்னதாக ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட சந்தர்ப்பத்தில், ​​சபாநாயகர் இது தவறான செய்தி என்று குறிப்பிட்டார். மூடப்படும் நிறுவனங்களில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் உள்ளடங்கவில்லை என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

எனவே, சபாநாயகர் அவ்வாறு கூறியது உண்மை தானா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *