LATEST
தமிழ் பேசும் 6 கட்சிகள் இணைந்து செயல்பட ஒப்பந்தம்!2027 பட்ஜெட் தாக்கல் திகதி அறிவிப்பு – நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்!டெங்கு கட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சரும் GMOA-வும் அவசர ஆலோசனை!பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார் – இசை உலகம் துயரத்தில்!இங்கிலாந்தின் ஆதிக்கம் – இந்தியாவுக்கு வரலாற்று தோல்வி!பல்கலைக்கழக அனுமதி: வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாதம் வெளியீடு!பல மாகாணங்களில் மழை!வாகன இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடா? பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை!தமிழ் பேசும் 6 கட்சிகள் இணைந்து செயல்பட ஒப்பந்தம்!2027 பட்ஜெட் தாக்கல் திகதி அறிவிப்பு – நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்!டெங்கு கட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சரும் GMOA-வும் அவசர ஆலோசனை!பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார் – இசை உலகம் துயரத்தில்!இங்கிலாந்தின் ஆதிக்கம் – இந்தியாவுக்கு வரலாற்று தோல்வி!பல்கலைக்கழக அனுமதி: வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாதம் வெளியீடு!பல மாகாணங்களில் மழை!வாகன இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடா? பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை!
உள்ளூர்

பல மாகாணங்களில் மழை!

July 12, 2026 · Tamil Ceylon LK

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேவேளை, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எனினும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று நிலைமையைப் பொறுத்தமட்டில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மாகாணத்திலும், மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

Related Stories

மேலும் ›