சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை (27) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும், திட்டமிட்டபடி நாளை முன்னிலையாக முடியாது என்பதையும், எதிர்வரும் ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சட்டத்தரணிகள் ஊடாக ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
Follow & Share




