கிரிக்கெட் உலகின் அதிக கவனம் பெற்ற போட்டி இன்று

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Published September 14, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

 குறித்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதுவரை இடம்பெற்றுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்களின் அடிப்படையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் 19 போட்டிகளில் மோதியுள்ளன. 

 இதில் இந்திய அணி 10 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன்,

3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. அத்துடன் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட இராணுவ மோதலுக்குப் பின்னர், இரு நாடுகளும் விளையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

 இந்தநிலையில் குறித்த போட்டி இரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *