LATEST
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை குறைப்பு அறிவிப்பு!ஜோன்ஸ்டனிடம் வாக்குமூலம்; பின்னர் கைது!அதிகாலையில் துப்பாக்கிச் சூடு; கொள்ளுப்பிட்டியில் பதற்றம்!நாமல் ராஜபக்ஷ விசாரணைக்காக முன்னிலை!இன்று நண்பகல் 12.09க்கு சில பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம்!அருந்திகா பெர்னாண்டோவிடம் விசாரணை தீவிரம்!கெஹல்பத்தர பத்மே குறித்து நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நாளை காலை 9 மணிக்கு ஆஜராக நாமலுக்கு அறிவிப்பு!பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை குறைப்பு அறிவிப்பு!ஜோன்ஸ்டனிடம் வாக்குமூலம்; பின்னர் கைது!அதிகாலையில் துப்பாக்கிச் சூடு; கொள்ளுப்பிட்டியில் பதற்றம்!நாமல் ராஜபக்ஷ விசாரணைக்காக முன்னிலை!இன்று நண்பகல் 12.09க்கு சில பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம்!அருந்திகா பெர்னாண்டோவிடம் விசாரணை தீவிரம்!கெஹல்பத்தர பத்மே குறித்து நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நாளை காலை 9 மணிக்கு ஆஜராக நாமலுக்கு அறிவிப்பு!
உள்ளூர்

இன்று நண்பகல் 12.09க்கு சில பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம்!

September 4, 2026 · Tamil Ceylon LK

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 07 வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

இதற்கமைவாக, இன்று (04) நண்பகல் 12.09 மணிக்கு நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக்க, மீகஹாகிவுல உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›