LATEST
பாடசாலைகள் திறப்பு – டெங்கு தடுப்புக்கு விசேட நடவடிக்கை!வறட்சி தீவிரம் – ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!யாழ். கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை கடத்தலுக்கு முற்றுப்புள்ளி!பூட்டான் தலைவர்களுடன் பிரதமர் ஹரிணி முக்கிய பேச்சுவார்த்தை!இலங்கை விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம்!இன்று நண்பகல் இலங்கையின் சில பகுதிகளில் சூரியன் உச்சம்!NPP ஆட்சிக்கு இரண்டு ஆண்டுகள் – ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் உரை!பாடசாலைகள் திறப்பு – டெங்கு தடுப்புக்கு விசேட நடவடிக்கை!வறட்சி தீவிரம் – ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!யாழ். கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை கடத்தலுக்கு முற்றுப்புள்ளி!பூட்டான் தலைவர்களுடன் பிரதமர் ஹரிணி முக்கிய பேச்சுவார்த்தை!இலங்கை விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம்!இன்று நண்பகல் இலங்கையின் சில பகுதிகளில் சூரியன் உச்சம்!NPP ஆட்சிக்கு இரண்டு ஆண்டுகள் – ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் உரை!
உள்ளூர்

NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!

September 6, 2026 · Tamil Ceylon LK

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட மக்கள் பேரணித் தொடர் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்தப் பேரணித் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, முதலாவது மக்கள் பேரணி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு புளத்சிங்கள பகுதியில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது பேரணி பிற்பகல் 03.30 மணிக்கு பேருவளையில் நடைபெறவுள்ளது.

இதற்கு மேலதிகமாக பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டும் எதிர்வரும் நாட்களில் பேரணிகளை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி கட்சியினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள ‘சிறிகொத்த’ கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

Related Stories

மேலும் ›