LATEST
திலீபன் சிலை விவகாரத்தை முன்வைத்து அரசை சாடிய விமல் வீரவன்ச!ரஷ்ய எரிசக்தி கொள்வனவுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய வரிச் சட்டம்!CNN உள்ளிட்ட முன்னணி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை கதவு மூடல்!அனோஜனுக்கு கருணை கோரி சவூதி அரசிடம் அவசர வேண்டுகோள்!அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரம் அதிகரிக்கும்!அரசுத் தரப்பு விசாரணை நிறைவு – இப்போது பிரதிவாதி தரப்பு சாட்சி!Airbus கொள்வனவு சர்ச்சை – நாமல் மீது விசாரணை தொடர்கிறது!ஜே.ஆர். தொடங்கிய சமூக–பொருளாதார மாற்றத்தை தொடர கைகோர்ப்போம்” – ரணில்திலீபன் சிலை விவகாரத்தை முன்வைத்து அரசை சாடிய விமல் வீரவன்ச!ரஷ்ய எரிசக்தி கொள்வனவுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய வரிச் சட்டம்!CNN உள்ளிட்ட முன்னணி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை கதவு மூடல்!அனோஜனுக்கு கருணை கோரி சவூதி அரசிடம் அவசர வேண்டுகோள்!அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரம் அதிகரிக்கும்!அரசுத் தரப்பு விசாரணை நிறைவு – இப்போது பிரதிவாதி தரப்பு சாட்சி!Airbus கொள்வனவு சர்ச்சை – நாமல் மீது விசாரணை தொடர்கிறது!ஜே.ஆர். தொடங்கிய சமூக–பொருளாதார மாற்றத்தை தொடர கைகோர்ப்போம்” – ரணில்
உள்ளூர்

அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரம் அதிகரிக்கும்!

September 19, 2026 · Tamil Ceylon LK

இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›