முச்சக்கர வண்டி கோர விபத்து – குழந்தை பலி !
கொழும்பு - கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு...
Published September 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கொழும்பு – கண்டி பிரதான வீதியில், நேற்று மாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரின் கைகளில் இருந்த இரு குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில், பெண் குழந்தை ஒருவர் கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார்.
மேலும், குழந்தைகளின் தாய், முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றொரு நபர் ஆகியோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.