குஜராத் சரக்கு கப்பலில் தீ விபத்து !
குஜராத்திலிருந்து சோமாலியாவின் போசாசோவுக்குச்...
Published September 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
குஜராத்திலிருந்து சோமாலியாவின் போசாசோவுக்குச் செல்லும் வழியில் இருந்த சரக்கு கப்பல் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் பெருமளவில் அரிசி காணப்பட்டதால், தீ வேகமாக பரவியுள்ளது.
முதலில் கப்பல் இயந்திர அறையில் ஏற்பட்ட தீ, பிறகு மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அடர்த்தியான கரும்புகையும் தீப்பிழம்புகளும் வெளியே வந்ததையடுத்து, உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் மூன்று அனுப்பப்பட்டன.
மேலும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனவும், அதிகாரிகள் தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.