பாலஸ்தீனத்திற்கு 80% அங்கீகாரம்.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 80% நாடுகள்...
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 80% நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
மேலும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், அவற்றில் 151 நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உட்பட குறைந்தது 39 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
பெல்ஜியம், அன்டோரா, மால்டா, லக்சம்பர்க் மற்றும் மொனாக்கோ ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும், காசாவில் கிட்டத்தட்ட இரண்டு வருட போருக்குப் பிறகு, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா மற்றும் பிற நாடுகள் நேற்று (22) நியூயார்க்கில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இப்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.