பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு – 1,006 பேர் கைது !
நாடு தழுவிய ரீதியில் நேற்றைய தினம் (24) பொலிஸாரால்...
Published September 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாடு தழுவிய ரீதியில் நேற்றைய தினம் (24) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 1,006 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், நாடு முழுவதும் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய சிறப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.