LATEST
சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!
உள்ளூர்

திலீபனின் 38வது நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு.

September 26, 2025 · Tamil Ceylon LK

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், வெள்ளிக்கிழமை(26.09.2025) மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில், மாவடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பிரிநட் குணபாலனின் தலைமையில் நடைபெற்றது.

தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் சிறிநந்தியின் தாயாரான நல்லரெட்ணம் பவளமலரால் இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.

இந் நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், தாயக செயலணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

மேலும் ›