திஸ்ஸமஹாராமயில் துப்பாக்கிச்சூடு.
திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் நேற்று...
Published September 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் நேற்று (26) மாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போர 12 தோட்டா பயன்படுத்தப்படும் கல் கடஸ் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இவ் துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.