வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்.
கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம், பல்கலைகழக மானியங்கள்...
Published September 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக வாயிலிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து, நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகளக ஆசிரியர் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக குறித்த கவனயீர்ப்புபோராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது மூளை இழப்பு மூலதன இழப்பு, புதிதாய் எதுவும் வேண்டாம் பறித்ததை தா, தேவையான வெற்றிடங்களை நிரப்பு, உயர் கல்வி இன்றேல் உயர்ச்சி இல்லை போன்ற வாசகங்கள் எழுதிய பதாகையை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
