கைடவிடப்பட்ட குழந்தை மீட்பு – பெற்றோருக்கு விளக்கமறியல். #Video
ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட குழந்தையின்...
ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட குழந்தையின் தாய் – தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு புதன்கிழமை (1) அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயதுடைய பெற்றோர்களான நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்கமறியலில் வைக்கமாறு உத்தரவிடப்பட்டார்.
இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.