LATEST
மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!
உலகம்

காசாவிற்காண உதவிக் கப்பலை தடுத்தது இஸ்ரேல்

October 3, 2025 · Tamil Ceylon LK

காசாவிற்கு (Gaza) அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய (Israel) கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளதாக சரவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீன நகரமான காசா மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் கிடைப்பதையும் கட்டுப்படுத்தி வருகின்றது.

இந்தநிலையில், மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில் ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து குளோபல் சீ ஃப்ளோட்டிலா புறப்பட்டுள்ளது.

இந்த ஃப்ளோட்டிலா 44 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய கப்பல்களைக் கொண்ட குழுவாகும்.

இந்த குழு நேற்று (02) உதவிகளுடன் காசாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும், காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதில் வருகை தந்த ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிறரை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தி சிறைபிடித்துள்ளது.

குளோபல் சுமுட் கப்பல்கள் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த மக்கள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›