மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் கையளிப்பு.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட...
Published October 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம், அரசாங்கத்திடம் திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிகளின் உரிமைகள் நீக்கல் சட்டத்தின் படி, செப்டம்பர் 24ஆம் தேதி ஜனாதிபதி செயலாளரால் இத்தகைய அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும், அதன்படி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும், பாதுகாப்பு அதிகாரியின் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டதால், மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அடுத்த வாரம், பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து தேவையான பாதுகாப்பு வசதிகளை கோரவுள்ளதாகவும் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.