மின்சார கட்டண உயர்வு – ஆலோசனைகள் இன்று.
இலங்கை மின்சார சபையின் கட்டண உயர்வு முன்மொழிவைத்...
Published October 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மின்சார சபையின் கட்டண உயர்வு முன்மொழிவைத் தொடர்ந்து நடைபெற்று வந்த பொது ஆலோசனைகள் இன்று (அக்டோபர் 8) நிறைவடைகின்றன.
செப்டம்பர் 18 முதல் அனைத்து மாகாணங்களிலும் நடந்த இந்த ஆலோசனைகள், மேற்கு மாகாணத்தில் இன்று நடைபெறும் இறுதி அமர்வுடன் முடிகின்றன.
2025 ஒக்டோபர்–டிசம்பர் காலத்துக்காக, மின்சாரச் செலவுகள் அதிகரிப்பை காரணம் காட்டி, மின்சாரசபை 6.8% கட்டண உயர்வு கோரி சமர்ப்பித்துள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.