உலக அஞ்சல் தினம் – தபால் ஊழியர்கள் போராட்டம்.
உலக அஞ்சல் தினத்தன்று (09), நுவரெலியா தபால் நிலைய...
Published October 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலக அஞ்சல் தினத்தன்று (09), நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் பிரதான அஞ்சல் அலுவலகம் முன்பு கறுப்பு கைப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களை அவமதிக்கும் வகையில் அஞ்சல் மா அதிபர் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.
இன்றைய தினம் மதிய உணவு நேரத்தில் ஊழியர்கள் தபால் நிலையத்தை மூடிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில தபால் நிலையங்கள், பிராந்திய தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களின் ஊழியர்கள் கறுப்பு கைப்பட்டி அணிந்து பணிக்கு சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.
