மனித – யானை மோதலுக்கு நிலையான தீர்வு. #Video

சுற்றாடல் அமைச்சும் "Clean Sri Lanka" வேலைத்திட்டமும் இணைந்து செயற்படுத்தும்...

Published October 11, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

சுற்றாடல் அமைச்சும் “Clean Sri Lanka” வேலைத்திட்டமும் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்பு திட்டத்தின் புதிய ஓர் செயல்பாடு, புத்தளம் மாவட்டம் தப்போவ குளத்தை மையமாக கொண்டு நேற்று (அக்டோபர் 10) ஆரம்பமானது.

இது மனித – யானை மோதல் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கும் தேசிய வேலைத் திட்டமாக செயல்படவுள்ளது. “யானை வேலிக்கு அப்பால் ஒரு நிலையான தீர்வு” என்ற கருப்பொருளின் கீழ் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இவ் வேலைத்திட்டத்தில் தப்போவ குளம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றப்பட்டன, மேலும் முப்படை, பொலிஸ், இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 1000 பேர் சிரமதானத்தில் பங்கேற்றனர்.

இதனடிப்படையில், வனஜீவராசி பாதுகாப்பு வலயங்கள், குளங்களின் புனரமைப்பு, மற்றும் சமூக மைய அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் எலாரிஸ், அனாத்த குளங்களும் புனரமைக்கப்படவுள்ளன.

சுற்றாடல் அமைச்சர் வைத்திய தம்மிக்க படபெந்தி, அமைச்சர் சந்தன அபேரத்ன, மற்றும் பங்களித்த அலுவலர்கள், “Clean Sri Lanka” செயலகத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *