மலேசிய அழகுக்கலை போட்டி – 5 பதக்கங்கள் வென்ற இலங்கை.

மலேசிய அழகுக்கலை போட்டியில் யாழ்...

Published October 13, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மலேசிய அழகுக்கலை போட்டியில் யாழ் சுலக்‌ஷனா சஞ்சீவன், ஒரு வெள்ளி ஒரு வெண்கலமுமென இரு பதக்கங்களை வென்றுள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. யாழ் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமுமாக இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.

மேலும், கண்டியைச் சேர்ந்த எல். தர்ஸனுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன.

குறித்த போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றியிருந்த நிலையில்,இலங்கையைச் சேர்ந்த 7 அழகுக்கலை நிபுணர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களைஇயக்குனர் கயல்விழி ஜெயபிரகாஷ் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *