#News Alert மனுஷ நாணயக்காரவிற்கு பிணை !

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு நேற்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
ரூ.1 இலட்சம் ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ.4 மில்லியன் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவருக்கு, வெளிநாட்டு பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு டிசம்பர் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share



