தபால் ரயில்கள் உட்பட ஐந்து ரயில் சேவைகள் ரத்து.
கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை...
Published October 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை பிரதான ரயில் மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு இரவு தபால் ரயில்கள் உட்பட ஐந்து ரயில் சேவைகள் இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளன.
– பிற்பகல் 03.35 மணிக்கு – கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை
– இரவு 08.30 மணிக்கு – கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை (இரவு தபால்)
– பிற்பகல் 03.00 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
– பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
– மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை (இரவு தபால்)
குறிப்பாக மலையக ரயில் பாதையில் இருபுறமும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.