இன்றும் பலத்த மழைக்கான சாத்தியம்.
நாட்டில் இன்று வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன்...
நாட்டில் இன்று வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவான இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.