புட்டின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
Published October 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கடுமையாக சாடியுள்ளார்.
குறிப்பாக, ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை தேவையில்லாதது. இதற்கு பதிலாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
இது குறித்து ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில்,
அவர்கள் எங்களுடன் மோதுவதில்லை. நாங்கள் அவர்களுடன் சண்டையிடுவதில்லை. நாங்கள் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறோம். புட்டினும் அணுசக்தி ஏவுகணை சோதனை நடத்துவது தேவையில்லாதது.
சொல்லப்போனால் அவர் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர், தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என குற்றம்சாட்டியுள்ளார்.