பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு.
பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பாதுகாப்பு...
Published October 31, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (31) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டிருந்தார். இதன் போது இத் தீர்மனம் எடுக்கப்பட்டுள்ளது.