யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி
யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
Published November 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.