உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி உயிரிழப்பு
க.பொ.த உயர்தர பரீட்சையின் உயிரியல் பிரிவுக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவர் உயிரிழந்தது
க.பொ.த உயர்தர பரீட்சையின் உயிரியல் பிரிவுக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது அறையில் நேற்று (09) இரவு படித்துக்கொண்டிருந்த மாணவி, காலையில் எழுந்திருக்காததை கவனித்த பெற்றோர் மகளின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அவர் அறையில் மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை தம்புள்ளை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து, மருத்துவமனைக்குக் கொண்டுவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.
உயிரிழந்தவர் தம்புள்ளை மேல் அருள பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகள் குழு மாணவியின் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், மாணவியின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.