LATEST
ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!
உள்ளூர்

குரங்குகளின் தொல்லைக்கு தீர்வு கோரும் அம்பகமுவ மக்கள்!

November 13, 2025 · Tamil Ceylon LK

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்களின் மக்கள் குரங்குகளின் தொல்லை காரணமாக பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கினிகத்தேன, அம்பதலாவ, அடெர்டின், ஹட்லஹா, அம்பகமுவ, பலந்தோட்ட, பெரகஹமுல மற்றும் ஹொரகட ஆகிய கிராமங்களில் குரங்குகளின் அச்சுறுத்தல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்தக் கிராமங்களின் கிராம மக்கள், தங்கள் கிராமங்களில் சுற்றித் திரியும் குரங்குகள் தற்போது தங்கள் விளைநிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழைந்து, அங்கு சமைக்கப்பட்ட பொருட்களையும், வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களின் திரைச்சீலைகளையும் அழித்து வருவதாகக் கூறுகின்றனர்.

குரங்குகளால் தாங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி, இந்தக் குரங்குளை தங்கள் கிராமங்களிலிருந்து அகற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தக் கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

மேலும் ›