புதுடில்லி தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய
Published November 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெடிப்புக்குள்ளான கார் குறித்த சந்தேகநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைதானவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் இதுவரை 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புதுடில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கார்க்குண்டுத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 20 பேர் காயமடைந்தனர்.