கைவிடப்பட்ட சூட்கேசில் குஷ் போதைப் பொருள் மீட்பு

11 கோடியே 36 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதிக்கொண்ட குஷ் போதைப் பொருள்

Published November 18, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

11 கோடியே 36 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதிக்கொண்ட குஷ் போதைப் பொருள் தொகையுடன் கைவிடப்பட்ட சூட்கேஸ் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அரச உடமையாக்கப்பட்டுள்ள விமானப் பயணப் பொதிகள் மற்றும் பொருட்கள் பேணப்படும் களஞ்சியத்திலிருந்து இந்த சூட்கேஸ் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களாக சூட்கேஸை பொறுப்பேற்பதற்கு எவரும் வருகை தராததன் காரணமாக அதனை திறந்து சோதனையிட சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது அதிலிருந்து 11 கிலோ 367 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தாய்லாந்திலிருந்து வருகை தந்த பயணி ஒருவர் அதனை விமான நிலைய வருகை முனையத்தில் கைவிட்டு விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *