போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது!
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய
Published November 20, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, தெற்கு கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது பல சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பாதுகாப்பின் கீழ் குறித்த படகு தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் படகு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.