பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை
Published November 20, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வானிலை ஆய்வுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.