பாசிகுடா கடற்கரையில் நீராடச் சென்றவர் மாயம்!
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிகுடா கடற்கரையில் நேற்று (23) நீராடச் சென்ற ஒருவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
Published November 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிகுடா கடற்கரையில் நேற்று (23) நீராடச் சென்ற ஒருவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவர் பொலன்னறுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காணாமல் போன நபரைத் தேடும் பணியில் பொலிஸார் உயிர்காக்கும் படையினர், கடற்படை உயிர்காக்கும் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.