மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

Published November 26, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (25) நள்ளிரவு நிலவரப்படி இலங்கைக்கு தெற்கே அமைந்திருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 30 மணி நேரத்திற்குள் இது ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, அடுத்த சில நாட்களில் நாட்டில் மழை மற்றும் காற்று நிலைமை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வளிமண்டளவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மற்ற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *