குருணாகலில் பாரிய மண்சரிவுகள்: 5 பேர் உயிரிழப்பு; 23 பேர் மாயம்
குருணாகல் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான இரு வேறு மண்சரிவு பெரும் பா
Published November 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
குருணாகல் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான இரு வேறு மண்சரிவு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மண்சரிவில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதுடன், மேலும் 10 பேர் குறித்த எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அதே மாவட்டத்தில் இப்பாகமுவ பகுதியில் ஏற்பட்ட மற்றுமொரு மண்சரிவில் 10 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.