திரிபோஷ நிறுவனம் ரூ. 100 மில்லியனை திறைசேரிக்கு வழங்கியது!
லங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனம் இன்று (10) திறைசேரிக்கு ரூ.100 மில்லியனை
Published December 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
லங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனம் இன்று (10) திறைசேரிக்கு ரூ.100 மில்லியனை ஈவுத்தொகையாக செலுத்தியுள்ளது.
திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட குழுவினர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் இதற்கான காசோலையை கையளித்தனர்.
இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டார்.