மதுபான விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மதுபான உரிமக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், அதன் காரணமாக மதுபான விலையில்

Published December 15, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மதுபான உரிமக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், அதன் காரணமாக மதுபான விலையில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம். பி. என். பேமரத்ன தெரிவித்துள்ளார்.

மதுபான உரிமக் கட்டணங்களில் செய்யப்பட்ட திருத்தத்தின் போது, பாதுகாப்பு பிணை வைப்பு கட்டணங்களில் மாற்றம் இருந்தால், அதற்கான தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில உற்பத்தியாளர்கள் ஏற்கனவே அந்த பாதுகாப்பு பிணைத் தொகையை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ செலுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள தொகையும் வசூலிக்கப்படும் எனவும் விளக்கினார்.

தற்போது நாட்டில் போதிய அளவில் மதுபான உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருவதாகவும், புதிய உற்பத்தி நிலையங்களை தொடங்க முன்வருபவர்களுக்கு புதிய சுற்றறிக்கை முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மதுபான உற்பத்தி உரிமங்கள், கள்ளு உற்பத்தி உரிமங்கள், வினிகர் உற்பத்தி உரிமங்கள், வைன் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து வகைகளுக்கும் சுரா கட்டணங்கள் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2025 டிசம்பர் 05 அன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த யோசனையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *