காஸாவில் பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் உட்பட இருபதுபேர் உயிரிழப்பு.
காசா இஸ்ரேல் போர்
Published August 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தெற்கு காசாவின் கான் யூனிஸிலுள்ள நாசர் மருத்துவமனையின் மீது நேற்று (25) இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மீட்புப் பணிக்காக மருத்துவ உதவியாளர்களும், பத்திரிகையாளர்களும் வந்த நிலையில் இரண்டாவது வான் தாக்குதல் நடந்துள்ளது.இதில் ஐந்து பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மருத்துவமனை மீதான தாக்குலை உறுதிப்படுத்திய இஸ்ரேல், பத்திரிகையாளர்களை காயப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. இது தொடர்பில் உள் விசாரணை நடத்தப்படும் என அறிக்கை வெளிட்டுள்ளது.