இன்றைய வானிலை
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடமேல் மாகாணம் மற்றும் அம்பாறை, அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில், காலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.