சீன ட்ரோன்களுக்கு நிரந்தர தடை : அமெரிக்கா உத்தரவு
அமெரிக்காவில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் பல்வேறு
Published December 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்காவில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ட்ரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து நாட்டின் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சீன ட்ரோன்களுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரவு பாதுகாப்பு கட்டமைப்பை சிரமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.