26 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் ஆசிய ரக்பி தொடர் நடத்த வாய்ப்பு!

026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட 15 பேர் கொண்ட ஆசிய ரக்பி தொடரை இலங்கைக்கு நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது, என்று ஆசிய ரக்பி சம்மேளனம் நேற்று (24) மாலை அறிவித்தது.

Published December 25, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட 15 பேர் கொண்ட ஆசிய ரக்பி தொடரை இலங்கைக்கு நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது, என்று ஆசிய ரக்பி சம்மேளனம் நேற்று (24) மாலை அறிவித்தது.

சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை மீண்டும் ஆசிய இளையோர் ரக்பி தொடர் நடத்தும் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கை இத்தொடரை நடத்தியிருந்தது.

அந்த ஆண்டில், ஜீவன் குணதிலக்கவின் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அதனால், சிலியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ரக்பி தொடருக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இலங்கை அந்த ஆண்டு பெற்றது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *