ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நத்தார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Published December 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நத்தார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அண்மைய இயற்கை அனர்த்த காலங்களில் மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானத்தை பாராட்டிய அவர், அன்பு, அமைதி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தம் என வலியுறுத்தினார்.
சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொண்டு, நம்பிக்கையுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி,மனிதநேயம் மற்றும் கருணை நிறைந்த நத்தார் பண்டிகையாக அமைய வாழ்த்தினார்.